கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்த பட்டா..! மயிரிழையில் தப்பினார் சாரதி, பொன்னாலையில் சம்பவம்..
யாழ்.காரைநகரில் இருந்து பொன்னாலை நோக்கி பயணித்த பட்டா வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
எனினும் இந்த விபத்தில் பட்டா சாரதி தெய்வாதீனமாக சாரதி எந்தப் பாதிப்பும் இல்லாமல் தப்பித்தார். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.
நீர் வழங்கல் அதிகார சபையின் நீர் விநியோகக் குழாயில் பட்டா வாகனம் பொறுத்துக் கொண்டாதால் சேதம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.