ஐ.பி.எல் போட்டி தொடர்பில் புதிய தகவல்!! எந்த நாட்டில் நடக்க போகிறது தெரியுமா?

ஆசிரியர் - Editor III
ஐ.பி.எல் போட்டி தொடர்பில் புதிய தகவல்!! எந்த நாட்டில் நடக்க போகிறது தெரியுமா?

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு வெளிநாட்டில் நடைபெற அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், 

‘இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியை எங்கு நடத்துவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அனேகமாக இந்த போட்டி வெளிநாட்டில் நடைபெறவே வாய்ப்புள்ளது. 

கொரோனா பரவலால் தற்போது இந்தியாவில் நிலவும் சூழ்நிலையை பார்க்கையில், ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்தில் போட்டியை நடத்தினாலும் கூட பொருத்தமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்காது என்று தான் தோன்றுகிறது. 

இதனால் இந்த போட்டியை ஐக்கிய அரபு அமீரகம் அல்லது இலங்கையில் நடத்தலாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பின் தன்மையை பொறுத்து இந்த போட்டியை எந்த நாட்டில் நடத்துவது என்பது விரைவில் முடிவு செய்யப்படும்‘ என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு