மீசாலை- ரயில் நிலையத்தில் இளைஞன் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்..! இளைஞன் வைத்தியசாலையில், ஒருவர் கைது..
யாழ்.மிருசுவில் புகைரத நிலையத்தின் முன்னாள் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
இந்த சம்வம் நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. தாக்குதலில் காயமடைந்தவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மிருசுவில் பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.