வடக்கில் “நாடி பிடிக்க” விரைந்தது பிரித்தானிய இராஜதந்திரிகள் குழு!

ஆசிரியர் - Admin
வடக்கில் “நாடி பிடிக்க” விரைந்தது பிரித்தானிய இராஜதந்திரிகள் குழு!

பிரித்தானிய தூதரகத்தின் பிரதித் தூதுவர் நெஜில் கவனாக் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான இரண்டாவது செயலாளர் சிவோன் லெதம் ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு இன்று பயணம் மேற்கொண்டு சந்திப்புகளை நடத்தியுள்ளனர்.

இவர்கள், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் துணைத் தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிறேமச்சந்திரன் மற்றும் முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளனர்.

வடக்கு மாகாண பாதுகாப்பு நிலவரங்கள், தொடர் கைதுகள், இராணுவ பிரசன்னங்கள் போன்றவை தொடர்பாகவும் தேர்தல் கள நிலவரங்கள் தொடர்பாகவும், தமிழ் மக்களினுடைய அரசியல் நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்திகள் சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு