பல வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் வன்செயல்களுடன் தொடர்பு..! சாவகச்சோியில் இருவர் சிக்கினர்..
யாழ்.மாவட்டத்தில் பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சாவகச்சோி பகுதியில் இருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்பு இருக்கலாம்
என்ற சந்தேகத்தில் சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.