2 கோடி பெறுமதியான உயிர்கொல்லி போதைப் பொருளான “ஐஸ்” மற்றும் 25 கிலோ கஞ்சாவுடன் 50 வயது நபர் கைது..! யாழ்.பருத்துறையில் இன்று அதிகாலை சம்பவம்..
ஹயஸ் வாகனம் ஒன்றில் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான உயிர்கொல்லி போதைப் பொருளான ”ஐஸ்” போதைப்பொருளை கடத்திச் சென்ற 50 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையிலிருந்து ஹயஸ் வாகனத்தில் 2 கோடி பெறுமதியான 2 கிலோ ஐஸ் போதைப் பொருள் மற்றும் 25 கிலோ கஞ்சா ஆகியவற்றை கடத்திச் சென்ற நிலையில்,
பருத்துறை பகுதியில் இன்று அதிகாலை படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.