யாழ்.நகரில் அப்பாவிகளை அச்சுறுத்தி அடுத்தடுத்து வழிப்பறி செய்த கும்பல் சிக்கியது..! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் அப்பாவிகளை அச்சுறுத்தி அடுத்தடுத்து வழிப்பறி செய்த கும்பல் சிக்கியது..! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..

கோப்பு படம்

யாழ்.நகருக்கு வரும் இளைஞர்களை மிரட்டி தொலைபேசிகளை பறித்துச் செல்லும் வழிப்பறி கொள்ளை கும்பலை சேர்ந்த 3 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

யாழ்.நகரை அண்டியுள்ள நாவலர் வீதி, கைலாச பிள்ளையார்யார் கோவிலடி, கந்தர்மடம், இந்துக்கல்லுாரிக்கு பகுதிகளில் இந்த வழிப்பறி கும்பல் வீதியால் பயணிக்கும் 

இளைஞர்களை வழிமறிக்கும் கொள்ளை கும்பல் தங்களுடைய தங்கையை படம் எடுத்ததாக கூறி அச்சுறுத்தி தொலைபேசியில் உள்ள படங்களை பார்ப்பதுபோல் பாசாங்கு செய்து 

தொலைபேசியுடன் தப்பி ஓடிவிடுவர். இவ்வாறான கொள்ளை சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், 

பறித்துச் செல்லப்பட்ட தொலைபேசி ஒன்று கைப்பற்றப்பட்டதுடன், அந்த தொலைபேசி வழிப்பறி கும்பலால் விற்பனை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில் தொடரப்பட்ட விசாரணைகளில் அரியாலையை சேர்ந்த இருவரும், இராசாவின்தோட்டம் பகுதியை சேர்ந்த ஒருவருமாக 25 வயதுக்குட்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

குறித்த 3 பேரும் யாழ்.நீதிவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது பறித்து செல்லப்பட்ட தொலைபேசியை வாங்கியவரை 

பிணையில் செல்ல அனுமதித்ததுடன் சந்தேகநபர்கள் 3 பேரையும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த பொலிஸார் விண்ணப்பம் செய்த நிலையில், 

அடையாள அணிவகுப்புக்கு உட்படாமல் தம் குற்றங்களை ஒப்புக் கொள்வதாக சந்தேகநபர்கள் மன்றில் கூறிய நிலையில், 

இதனையடுத்து சந்தேக நபர்கள் மூவருக்கும் எதிராக குற்றப்பத்திரத்தை நாளை செவ்வாய்க்கிழமை மன்றில் சமர்ப்பிக்க பொலிஸாருக்கும் அறிவுறுத்தல் வழங்கிய நீதிவான்  ஏ.பீற்றர் போல், 

அதுவரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஹர்ஷா சமரக்கோனின் வழிகாட்டலில் 

பொலிஸ் உத்தியோகத்தர்கள் ரஞ்சி, சேனாரத்ன, கிங்ஸ்லி, மரியசிறி, கபில்தாஸ் ஆகியோர் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு