மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடியில் மனைவியைக் கொலை செய்த கணவன்!

ஆசிரியர் - Admin
மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடியில் மனைவியைக் கொலை செய்த கணவன்!

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பகுதியில் இன்று காலை 6 மணியளவில் பெண் ஒருவர், கொலை செய்யப்பட்டுள்ளார் என்று களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலய வீதியில் வசித்து வந்த இரு பிள்ளைகளின் தாயான துர்க்கா (34 வயது) என்பவரே, கொலை செய்யப்பட்டவர் ஆவார். இதையடுத்து, உயிரிழந்த பெண்ணின் கணவர், களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட குடும்பத் தகறாறு காரணமாக, தனது மகளை மருமகனே கொலை செய்துள்ளார் என உயிரிழந்த பெண்ணின் தாயாரான தேவநேசராசா சாந்தநிதி பொலிஸில் முறையிட்டுள்ளார்.

களுவாஞ்சிகுடி பொலிஸாரும், மட்டக்களப்பு தடயவியல் பொலிஸ் பிரிவும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு