யாழ்.கோண்டாவில் பகுதியில் படையினர் குவிக்கப்பட்டு சுற்றிவளைப்பு தேடுதல்..! வாள்வெட்டு குழுக்களை தேடியா..?
கோப்பு படம்
யாழ்.கோண்டாவில்- அன்னங்கை பகுதியில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டு சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
குறித்த பகுதி ஊடாக செல்லும் சகல வீதிகளும் முடக்கப்பட்டு உள்நுழைவதும், வெளி செல்வதும் நிறுத்தப்பட்டு இந்த சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்படுகின்றது.
கடந்த சில மணி நேரமாக மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்பு தேடுதல் எதற்காக? என்ற தகவல் கிடைக்கவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சுற்றிவளைப்பு சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் வாள்வெட்டு குழுக்களை இலக்காக கொண்டதா? என சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.