சிறுப்பிட்டி விபத்தில் பிரான்ஸ் குடியுரிமை பெற்ற முதியவர் உயிரிழப்பு..!
யாழ்.சிறுப்பிட்டி பகுதியில் விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நீர்வேலியை சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 19ம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது தவறுதலாக கீழே விழுந்து மயக்கமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குறித்த நபர்,
உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவந்தபோதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்திருக்கின்றார்.