யாழ்.சித்தங்கேணியில் நடந்த பயங்கரம்..! வயோதிப பெண்களை தாக்கி, பெருமளவு நகை, பணம் கொள்ளை..
யாழ்.சித்தங்கேணியில் வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்த வயோதிப பெண்களை அச்சுறுத்தி 25 பவுண் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டிருக்கின்றது.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 1.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, அதிகாலை 1.10 வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் தனிமையில் இருந்த இரு வயோதிப பெண்களை அச்சுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து ஒருவர் கூச்சலிட்ட நிலையில், அவருடைய வாயை துணியால் கட்டிவைத்துள்ளனர். பின்னர் அலுமாரியிலிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுவிட்டு வேறு நகைகள் இருந்தால் தரும்படி
வாயைக் கட்டிய வயோதிபப் பெண்ணைத் தாக்கி கொள்ளையர்கள்கள் கேட்டுள்ளனர். கொள்ளையர்களுக்குப் பயந்து போத்தல்களில் போட்டு வைத்த நகைகளையும் அந்தப் பெண் எடுத்துக் கொடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தடயவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.