நான் ஒரு உவமைக்காகவே 3000 படையினரை கொன்றதாக சொன்னேன்..! விழுந்து படுத்தார் கருணா..

ஆசிரியர் - Editor I
நான் ஒரு உவமைக்காகவே 3000 படையினரை கொன்றதாக சொன்னேன்..! விழுந்து படுத்தார் கருணா..

கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் இன்று 7 மணி நேரம் சீ.ஐ.டியினர் விசாரணை நடாத்தியிருக்கின்றனர். 

இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஆஜராகிய கருணாவிடம் மாலை 5.30 மணி வரை விசாரணைகள் நடாத்தப்பட்டிருந்தன. 

ஜாதிக ஹெல உருமய, பத்தரமுல்லை எனும் முகவரியைச் சேர்ந்த ஹெடில்லே விமலசார எனும் தேரர் பொலிஸ் மா அதிபருக்கு அளித்த முறைப்பாடு, 

சி.ஐ.டி.க்கு விசாரணைகளுக்காக வழங்கப்பட்ட நிலையிலேயே, அதனை மையப்படுத்தி இந்த விசாரணைகள் இடம்பெற்றன. 

 இதன்போது கருணா அம்மானிடம் சி.ஐ.டி. விஷேட வாக்கு மூலம் ஒன்றினையும் பதிவு செய்ததுடன், அவசியம் ஏற்படின் மீள விசாரணைக்கு அழைப்பதாகவும் தெரிவித்துள்ளது.

யுத்த காலத்தில் இராணுவத்தினரில் 2000 முதல் 3000 எண்ணிக்கையினரை தான் புலிகள் அமைப்பில் இருக்கும் போது கொலை செய்திருந்ததாக விநாயகமூர்த்தி முரளிதரன் 

வெளியிட்டுள்ள விடயம் தொடர்பில் சி.ஐ.டி. ஆரம்பித்துள்ள குற்றவியல் விசாரணைகளில் ஒரு அங்கமாகவே கருணாவிடம் இந்த வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக 

தெரிவித்த பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர், அது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னரேயே சட்ட நடவடிக்கை தொடர்பில் 

தீர்மானிக்க முடியும் என கூறினார். கருணா வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்து, அதன் உள்ளடக்கத்தின் உண்மைத் தன்மை தொடர்பில் சி.ஐ.டி விசாரணைகளை கடந்த 

4 தினக்களுக்கு முன்னர் ஆரம்பித்தது. பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவுக்கு விடுத்துள்ள 

விஷேட உத்தரவுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸின் நேரடி கட்டுப்பாட்டில் 

உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் இயங்கும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயந்தபயாகலவை பிரதான விசாரணை அதிகாரியாக கொண்டதாக 

இந்த சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சி.ஐ.டி.யின் இரு குழுக்கள் அம்பாறை மற்றும் மட்டக்களப்புக்கு பகுதிகளுக்கு நேற்று சென்று, 

கருணா அம்மான், குறித்த சர்ச்சைக்குரிய விடயங்களை வெளிப்படுத்திய நிகழ்வு தொடர்பிலும் அதில் பங்கேற்றவர்கள் தொடர்பிலும் விஷேட விசாரணைகளை ஆரம்பித்து 

வாக்கு மூலங்களை பதிவு செய்ய ஆரம்பித்தது.ஆரம்பத்தில் சி.ஐ.டி. வாக்கு மூலம் பெற அழைத்த போது சுகயீனம் காரணமாக வர முடியாது 

என அறிவித்த கருணா அம்மான், இன்று ஆஜராகி வாக்கு மூலம் வழங்கினார்.இந்நிலையில் வாக்கு மூலம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்.

நான் நடந்த உண்மையைக் கூறியிருக்கின்றேன். எதுவித தவறான கண்ணோட்டத்திலும் எதுவும் நான் கொடுக்கவில்லை. எவரையும் புண்படுத்தும் விதத்திலும் 

நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. ஆகவே, இந்த நாட்டு மக்களை நாங்கள் நேசிக்கின்றோம். எங்களுடைய தேர்தல் பிரசாரம் தொடரும். 

ஆனால் எதுவித வன்முறையும் இனத்துவேசமும் இல்லாத விதத்தில்தேர்தல் பிரசாரத்தை கொண்டு செல்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அத்துடன் அரசியல் வாதிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தவறான விடயம். அந்தக் காலத்தில் நடந்த விடயத்தை ஒரு உவமைக்காக, மேடைப் பிரசாரமாக, 

தேர்தல் பிரசாரமாகக் கூறப்பட்ட விடயம். ஆகவே, இதை பூதாகரமாக்குவதில் எதுவித அர்த்தமும் இல்லை. எங்களுடைய அரசாங்கத்திற்கு சிங்கள மக்களின் வாக்குகளைக் 

குறைப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சினை இது. ஆகவே, இதை நாங்கள் முறியடித்து வெற்றியடைவோம் என்பதைக் கூறிக்கொள்கின்றேன்  என தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு