வடக்கின் பல பாகங்களில் இன்று வியாழக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8.00மணியிலிருந்து மாலை 05.00 மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
யாழ்.சாவகச்சேரி தபாலக வீதி, கண்டுவில் டச்சு வீதி, அரசடி ஆசிரியர் வீதி, பெருங்குளம் சந்தி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.