திருவிழா ஆரம்பமான நிலையில் பூசகர் மீது ரவுடிகள் தாக்குதல்..! பூசகர் யாழ்.போதனா வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
திருவிழா ஆரம்பமான நிலையில் பூசகர் மீது ரவுடிகள் தாக்குதல்..! பூசகர் யாழ்.போதனா வைத்தியசாலையில்..

திருவிழா ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் பூசகர் மீது ரவுடி கும்பல் தாக்குதல் நடத்திய நிலையில் காயமடைந்த பூசகர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இச் சம்பவத்தில் புன்னாலைகட்டுவன் ஆயக்கடவை சித்தி விநாயகர் ஆலய குருவான சுந்தரராஜா குருக்கள் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

புனர்நிர்மான பாலஸ்தானம் செய்யப்பட்டு இன்றையதினம் திருவிழா இடம்பெற இருந்த நிலையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாக பூஜை வழிபாடுகள் குறைவடைந்து இருந்தது. 

இவ் ஆலய பூசகருக்கும் பரிபாலன சபையினருக்கும் இடையில் ஆலயம் தொடர்பான வழக்கு மல்லாகம் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில் தீர்ப்பு ஆலய குருவிற்கு சார்பாக வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது. 

இன்று திருவிழா வெகு விமர்சியாக இடம்பெறவிருந்த நிலையிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு