அரசாங்கம் வழங்கிய 5 ரூபாய் நிவாரண பணத்தை திருடிய பல கிராமசேவகர்கள், சமூர்த்தி உத்தியோகஸ்த்தர்கள் மாட்டினர்..! யாழ்.மாவட்டத்தில் மட்டும்..

ஆசிரியர் - Editor I
அரசாங்கம் வழங்கிய 5 ரூபாய் நிவாரண பணத்தை திருடிய பல கிராமசேவகர்கள், சமூர்த்தி உத்தியோகஸ்த்தர்கள் மாட்டினர்..! யாழ்.மாவட்டத்தில் மட்டும்..

கொரோனா போிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் வழங்கிய 5 ரூபாய் நிவாரண கொடுப்பனவினை களவாடிய பல கிராமசேவகர்கள், சமூர்த்தி உத்தியோகஸ்த்தர்கள் மீத விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருக்கின்றது. 

யாழ்.மாவட்டத்தில் மேற்கொண்ட 5 ஆயிரம் ரூபா விநியோகத்தில் தகுதி அற்றவர்களிற்கும், கிராமத்தில் வசிக்காதவர்களிற்கும் விநியோகித்தமை இதுவரை 4 கிராமங்களில் கண்டறியப்பட்டு விசாரணைக்கு உந்தரவிடப்பட்டுள்ளது.

இதுவரை கண்டறியப்பட்ட இடங்களில் சாவகச்சேரி , சங்காணை , நல்லூர் உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் கிராம சேவகர்கள் தற்காலிகமாக பிரதேச செயலகங்களிற்கு இணைப்புச் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெறும் நிலையில் கிராம சேவகர்கள் முறைகேடாக வழங்கியவர்களிடம் நிதியை மீள வழங்குமாறு கோருவதோடு மீண்டும் மாற்று ஆவணங்கள் தயாரிப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. 

பலருக்கு குறித்த நிதி கிடைக்கவில்லை எனச் சுட்டிக்காட்டும் நிலமையில் இவ்வாறான தன்மையும் கானப்படுகின்றது. இது தொடர்பில் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த மூன்று பிரதேச செயலாளர் பிரிவிலும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. 

இதில் சாவகச்சேரி தொடர்பிலேயே அதிக முறைப்பாடு கிடைத்தன. இவை தொடர்பான விசாரணைகள் முடிந்த பின்னரே முழுமையான விபரம் தெரிவிக்க முடியும். என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு