திருட்டு நகை வியாபாரம்..! யாழ்.நகரில் 4 நகைக்கடை உரிமையாளர்கள் கைது.. காட்டிக்கொடுத்த திருடன்..

ஆசிரியர் - Editor I
திருட்டு நகை வியாபாரம்..! யாழ்.நகரில் 4 நகைக்கடை உரிமையாளர்கள் கைது.. காட்டிக்கொடுத்த திருடன்..

யாழ்.நகரில் திருட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 4 நகைக்கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் வட்டாரங்கள் தொிவிக்கின்றன. 

திருடன் ஒருவனை யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்துள்ளனர். அவ்வாறு கைது செய்யப்பட்ட திருடன் களவாடப்பட்ட நகைகளை நகைக் கடைகளில் விற்பனை செய்துவிட்டார் எனத் தெரிவித்த நிலையில் திருடனை நகைக் கடைகளுக்கு நேரில் கூட்டிச் சென்ற பொலிஸார் அவன் இனம்காட்டிய நகைக் கடை உரிமையாளர்களைக் கைது செய்தனர்.

கைது செய்த நகை கடை உரிமையாளர்களில் மூவர் கஸ்தூரியார் வீதியிலும், ஒருவர் மின்சார நிலைய வீதியிலும் கடை நடத்துபவர்கள். ஒரு கடைஉரிமையாளர் மட்டும் 18 கிராம் தங்கத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். 

இது தொடர்பில் மேலதிக விசாரணை இடம்பெறுவதோடு பொலிஸார் இரகசிய விசாரணைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு