வடக்கு குண்டுவெடிப்புகளின் பின்னணி- வெளியிட்டார் விக்கி!

ஆசிரியர் - Admin
வடக்கு குண்டுவெடிப்புகளின் பின்னணி- வெளியிட்டார் விக்கி!

வடக்கில் குண்டு வெடிப்புகள் நடந்ததாக கூறப்படும் சம்பவங்களுக்கு அரசியல் பின்னணியே காரணம் என்று தாம் நம்புவதாக வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர், இந்தச் சம்பவங்களுடன் எவ்வித்த்திலும் தொடர்புபடா வடக்கிலுள்ள தமிழ் மக்கள் பாதுகாப்பு என்ற போர்வையில் தொல்லைக்குள்ளாக்கப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளனார்.

சிறுபான்மையினரை சிங்கள மக்களுக்கு எதிரானவர்களாக காண்பித்து, அவர்களை அடங்கும் வல்லமை கொண்டவர்கள் தாங்கள் தான் என்று காட்டுவதன் மூலம், சிங்கள மக்களின் பெருவாரியான வாக்குகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர்கள் நம்புகின்றனர் எனவும், அதற்காகவே வடக்கில் இவ்வாறான சம்பவங்கள் நடப்பதாகவ தாம் கருதுவதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

வடக்கில் இதுவரையில்லாத வகையில் குண்டுகள் வெடிப்பதாகவும், கண்டுபிடிக்கப்படுவதாகவும் கூறப்படுவதன் பின்னணி அரசியல் தான் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அதேவேளை, தமது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடுத்த சில நாட்களுக்குள் தமது சொத்து விபரங்களை வெளியிடுவார்கள் என்றும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

வேட்பாளர்களின் சொத்து விபரங்களை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இந்த மாத இறுதிக்கும் அதனை வெளியிடுவதற்கு தீர்மானித்திருப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு