பிஸ்டல்களை காட்டி கைகளை உயர்த்துமாறு கூறி படையினர் அடாவடி..! நாகர்கோவில் பகுதியில் பதற்றத்தில் மக்கள்..

ஆசிரியர் - Editor I
பிஸ்டல்களை காட்டி கைகளை உயர்த்துமாறு கூறி படையினர் அடாவடி..! நாகர்கோவில் பகுதியில் பதற்றத்தில் மக்கள்..

யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் 10 பீல்ட்பைக் மோட்டார் சைக்கிள்களில் வந்த படையினர் கைத் துப்பாக்கியை காண்பித்து மக்களை அச்சுறுத்தியுள்ளதாக பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆனந்தராசா சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு 07:30 அளவில் நாகர்கோவில் பகுதியில் நின்றிருந்தபோது அங்கு வந்த படையினர் தங்களை கைகளை மேலே தூக்குமாறு கைத் துப்பாக்கிகளை காட்டி மிரட்டியதாகவும், வேலை முடித்து வீதியால்ப் பணித்தவர்களை மறித்து சோதனை செய்துள்ளதுடன், 

10 நிமிடங்கள் வரை கைகளை உயர்த்திய வாறே நிற்குமாறு அச்சுறுத்தினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு