யாழ்.நகரில் தொடரும் திருடர்கள் கைவரிசை..! பொருள் வாங்குபவர்போல் வந்த திருடனிடம் 55 ஆயிரம் இழந்த வர்த்தகர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் தொடரும் திருடர்கள் கைவரிசை..! பொருள் வாங்குபவர்போல் வந்த திருடனிடம் 55 ஆயிரம் இழந்த வர்த்தகர்..

யாழ்.நகரில் உள்ள கடை ஒன்றுக்குள் பொருட்கள் வாங்குபவர்போல் நுழைந்த திருடன் அங்கிருந்த ஒரு தொகை பணத்தை திருடிக் கொண்டு தப்பி சென்றுள்ளான். 

நேற்று காலை கடை  உரிமையாளர் கடையை திறந்த சமயம் பொருள் ஒன்றை வாங்குவதுபோல் பாவனை செய்த திருடன் கடை உரிமையாளர் பொருளை எடுக்க சென்ற சமயம்

55 ஆயிரம் ரூபாண் பணத்துடன் இருந்த பண பேர்ஸை திருடிக் கொண்டு தப்பி ஓடியுள்ளான். இதனையடுத்து சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்கப்பட்டள்ளதுடன், 

சம்பவம் தொடர்பாக சீ.சி.ரீ.வி கமராக்களின் பதிவுகளை பெற முயற்சித்துள்ள பொலிஸார் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளனர். 

அண்மைய நாட்களில் யாழ்.மாநகரில் திருட்டு, ஏமாற்று சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு