யாழ்.நீர்வேலியில் சற்றுமுன் கோரவிபத்து..! மயிரிழையில் தப்பினார் சாரதி..
யாழ்.பருத்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த ஹயஸ் வாகனத்தின் ரயர் காற்றுபோன நிலையில் வீதியைவிட்டு விலகி தென்னை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் 12.30 மணியளவில் நீர்வேலி கந்தசுவாமி கோயிலுக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது. வானில் பயணித்தவர்கள் காயங்கள் இன்றி தப்பித்தனர். வான் கடுமையாக சேதமடைந்துள்ளது.
ரெலிகொமிற்கு சொந்தமான வான் அம்பாறையில் இருந்து வருகைதந்ததாக கூறப்படுகிறது.