வல்வெட்டித்துறையில் இராணுவ சுற்றிவளைப்பு..! இருவர் கைது, மறைத்துவைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பின் பின்னணியா..?

ஆசிரியர் - Editor I
வல்வெட்டித்துறையில் இராணுவ சுற்றிவளைப்பு..! இருவர் கைது, மறைத்துவைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பின் பின்னணியா..?

யாழ்.வல்வெட்டித்துறை கெருடாவில்- சீலாப்புலம் பகுதியில் இன்று அதிகாலை இராணுவ சுற்றிவளைப்பு இடம்பெற்றிருக்கின்றது. இதன்போது இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

கொம்மாந்துறையில் கடந்த வாரம் கிணறு ஒன்றிலிருந்து 3 குண்டுகள் மற்றும் துப்பாக்கியும் மீட்கப்பட்டன. இந்த நிலையில் வல்வெட்டித்துறை கெருடாவில் – சீலாப்புலம் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணி முதல் காலை 7.30 மணிவரை 

இராணுவம் மற்றும் பொலிஸாரால் சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது.ஊரணி இராணுவ முகாம் படையினரும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்த இந்தத் தேடுதலில் 

சுமார் 40 வீடுகள் சோதனைக்கு உள்படுத்தப்பட்டன. இதன்போது நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டனர் என்று வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு