ஆனையிறவு படைத்தள தாக்குதலில் 2000 தொடக்கம் 3000 இராணுவத்தை கொன்றேன்..! நான் ஆபத்தானவன், கூறுவது கருணா..

ஆசிரியர் - Editor I
ஆனையிறவு படைத்தள தாக்குதலில் 2000 தொடக்கம் 3000 இராணுவத்தை கொன்றேன்..! நான் ஆபத்தானவன், கூறுவது கருணா..

ஆனையிறவு படைத்தளம் மீதான தாக்குதலின்போது 2000 தொடக்கம் 3000 படையினரை கொன்றேன். என தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவர் கருணா கூறியுள்ளார். 

கொரோனாவை விட கருணா ஆபத்தானவர் என்று காரைதீவு பிரதேச சபை தலைவர் தெரிவித்த கருத்துக்கே மேற்கண்டவாறு கருணா பதிலளித்துள்ளார்.

நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு இதனை அவர் தெரிவித்தார். மேலும்,தேசிய பட்டியல் ஊடாக மீண்டும் என்னை நாடாளுமன்றுக்கு தெரிவு செய்ய பிரதமர் விடுத்த அழைப்பை நிராகரித்தேன். 

மக்களின் ஆணையுடன் மீண்டும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் வருவேன் என்று அவருக்கு அறிவித்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு