மாமனாருடன் தகராறு, ஆட்டோவை கொழுத்திய மருமகன்..! நீதிமன்றம் கொடுத்த உத்தரவு..

ஆசிரியர் - Editor I
மாமனாருடன் தகராறு, ஆட்டோவை கொழுத்திய மருமகன்..! நீதிமன்றம் கொடுத்த உத்தரவு..

மனைவியின் தகப்பனுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து அவருக்கு சொந்தமான ஆட்டோவை பெற்றோல் ஊற்றி கொழுத்திவிட்டு தலைமறைவான மருமகன் கைது செய்யப்பட்டு 28ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெலிகொம் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது மாமனாருக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியை பெற்றோல் ஊற்றி எரித்துவிட்டு தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று மாலை குறித்த சந்தேக நபர் 

காத்தான்குடி பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சி.சி.ரி.வி. கமெராவின் துணையுடன் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே 

அவரை விளக்க மறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு