ஓடிக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்தது!

ஆசிரியர் - Admin
ஓடிக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்தது!

மட்டக்களப்பில் ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.

மட்டக்களப்பு - பார் வீதியில் உள்ள வேதாரணியம் சதுக்கம் பகுதியில் இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றது. ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு ஊடாக காத்தான்குடி நோக்கிச் சென்றவரின் மோட்டார் சைக்கிளே திடீர் என தீ பிடித்துள்ளது.

குறித்த பகுதியில் நின்றவர்களினால் மோட்டார் சைக்கிளில் இருந்த தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்த தீ காரணமாக மோட்டார் சைக்கிளின் பெரும் பகுதி எரிந்து நாசமாகியுள்ளதுடன், இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு