யாழ்.கொடிகாமம் பகுதியில் அதிகாலையில் வாள்கள், கத்திகளுடன் வீடு புகுந்து இளம் பெண் கடத்தல்..! CID என கூறி மக்கள் மீதும் தாக்குதல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமம் பகுதியில் அதிகாலையில் வாள்கள், கத்திகளுடன் வீடு புகுந்து இளம் பெண் கடத்தல்..! CID என கூறி மக்கள் மீதும் தாக்குதல்..

யாழ்.கொடிகாமம்- மந்துவில் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இன்று அதிகாலை வாள்கள், கத்திகளுடன் நுழைந்த 7 பேர் கொண்ட கும்பல் 20 வயதான இளம்பெண்ணை கடத்தி சென்றுள்ளது.

வீடொன்றுக்குள் முகத்தை மறைத்தவாறு வாள்கள், கத்தி, கொட்டன் போன்றவற்றுடன் நுழைந்த கும்பல் வீட்டிலிருந்தவர்களை மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளது.

இதனால் வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்ட நிலையில் அயலவர்கள் கூடியுள்ளனர். இதனையடுத்து தாம் CID  பொலிஸார் என கூறியுள்ளனர்.

இதனைக் கேட்ட அயலவர்கள் அச்சமடைந்த நிலையில் அதனை சாதகமாக்கிய குறித்த கும்பல் வீட்டுக்குள்ளிருந்த 20 வயதான பெண்ணை கடத்தி சென்றுள்ளனர்.

சில மணித்தியாலங்களின் பின் கடத்தப்பட்ட பெண் வீட்டின் அருகில் உள்ள கோவிலடியில் இறக்கிவிடப்பட்டிருக்கின்றார். சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நேரத்தில் வாள்கள், கத்திகள், பொல்லுகளுடன் வந்த கும்பல் குறித்து பொலிஸார் நடவடிக்கை எடுக்க தயங்கிவருகின்றனர்.

இதேவேளை குறித்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரை தமக்கு தெரியும் என கூறும் ஊர் மக்கள் அதில் ஒருவர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் ஒருவரின்

நெருங்கிய உறவினர் எனவும் அதனாலேயே பொலிஸார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் கூறியுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு