3 லட்சம் ரூபாய்க்கு ஆசைப்பட்ட பிரதேச செயலர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர்..! தப்பிக்க வழியின்றி சிக்கினர்..

ஆசிரியர் - Editor I
3 லட்சம் ரூபாய்க்கு ஆசைப்பட்ட பிரதேச செயலர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர்..! தப்பிக்க வழியின்றி சிக்கினர்..

மட்டக்களப்பு- ஆலையடிவேம்பு பிரதேச செயலர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் 3 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறும்போது கைது செய்யப்பட்ட நிலையில் 10ம் திகதிவரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். 

சப்ரிகம வீதி அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் உள்ள ஒப்பந்த வேலைகளை பெற்றுக்கொடுப்பதற்காக சுமார் 3 இலட்சம் ரூபாய் கையூட்டுப் பெறப்பட்ட வேளையில் கொழும்பிலிருந்து வருகை தந்த லஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள்

குறித்த இருவரையும் இன்று நண்பகல் 12.30 மணியளவில் கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்று மாலை அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இவ் விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை 

கொழும்பு நீதிவான் நீதிமன்றில் விசாரிப்பதற்குரிய ஒப்புதல் அடிப்படையில் வழக்கு கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு