திருமணமான பெண்ணின் கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர்!

ஆசிரியர் - Admin
திருமணமான பெண்ணின் கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர்!

உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரியங்கா (வயது 22). இவருக்கு சென்ற ஆண்டு தான் திருமணமானது. இவர் கடந்த சில நாட்களாக பெற்றோருடன் தங்கியுள்ளார். 

இந்நிலையில், காதலர் தினமான நேற்று முன்தினம் (14-ம் தேதி) மெடிக்கலுக்கு சென்று மருந்து வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பிய அவரை ஒரு மர்ம நபர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். 

இந்த கொலை தொடர்பாக ஆயுதங்களுடன் வாலிபர் ஒருவர் அப்பகுதியில் உள்ள மோடிநகர் போலீஸ் நிலையத்தில் நேற்று சரண் அடைந்தார்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், செல்போனில் பேசி தொல்லை கொடுத்ததாக பிரியங்கா தன் மீது போலீசில் புகார் அளித்தார். இதனால் போலீசார் தன்னை கைது செய்தனர். அதன் காரணமாகவே அவரை கொன்றதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து கொலை செய்யப்பட்ட பிரியங்காவின் பெற்றோர் கூறுகையில், அந்த வாலிபர் செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்தது குறித்து போலீசில் புகார் அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால் தான் தங்கள் மகள் உயிரிழந்ததாக கூறியுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்காத போலீஸ் ஆய்வாளரை இடைநீக்கம் செய்து மாவட்ட போலீஸ் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு