மட்டு,களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலய கிணற்றில் பொங்கி வழிந்த நீர்!

ஆசிரியர் - Admin
மட்டு,களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலய கிணற்றில் பொங்கி வழிந்த நீர்!

இன்று(புதன்கிழமை)அதிகாலை நிகழ்ந்துள்ளதாக ஆலயத்தின் பிரதம குருக்கள் தெரிவித்தார்.

இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக ஆலய பிரதமகுருக்கள் ஆலய நிருவாகத்தினரிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் ஆலயத்திற்கு விரைந்து கிணற்றைப் பார்வையிட்டுள்ளனர்.

இந்நிலையில், அவ்விடத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்ததையடுத்து ஸ்த்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் மக்களைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.அத்தோடு களுவாஞ்சிகுடிப் பகுதி பொதுச் சுகாதார உத்தியோகஸ்தரும் குறித்த இடத்திற்கு விரைந்து நிலமையினைப் பார்வையிட்டதுடன், இவ்விடயம் தொடர்பாக பிரதேச செயலாளர் மற்றும் ஆய்வுப் பிரிவுக்கும் அறிவிப்பதாகத் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு