மட்டக்களப்பு விபத்தில் ஊடகவியலாளர் பலி!

ஆசிரியர் - Admin
மட்டக்களப்பு விபத்தில் ஊடகவியலாளர் பலி!

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில், பெரியகல்லாறு நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் இன்று பிற்பகல் 2 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானதில் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்தார்.  

தீபம் ஊடக நிறுவனத்தில் பணியாற்றி வரும் திருகோணமலை உட்துறைமுக வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஊடகவியலாளர் மிதுன் என்றழைக்கப்படும் ஈ.மிதுன்சங்கர் என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.

குறித்த ஊடகவியலாளர் மற்றும் அவரது நண்பர்களான இரு ஊடகவியலாளர் உட்பட 4 பேர் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்தாறுமூலையில் இருந்து கல்முனைக்கு உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். 

பெரியகல்லாறு நாகதம்பிரான் ஆலையத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள்களை வீதி ஓரத்தில் நிறுத்திய போது பின்னால் வந்த உழவு இயந்திரம் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஊடகவியலாளர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இதனையடுத்து உழவு இயந்திர சாரதியை கைது செய்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஊடகவியலாளர் மிதுன்சங்கர் அவர்களின் குடும்பத்தினருக்கு யாழ்ப்பாணவலயம்.கொம் இணையத்தளம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு