கோடைகாலத்தில் தண்ணீரை மன்பானையில் ஊற்றி வைத்துக் குடிச்சா இவ்வளவு நன்மைகள் இருக்கா..?

ஆசிரியர் - Admin
கோடைகாலத்தில் தண்ணீரை மன்பானையில் ஊற்றி வைத்துக் குடிச்சா இவ்வளவு நன்மைகள் இருக்கா..?

கோடைகாலம் வந்துவிட்டாலே அனைவருக்கும் பசியை விட தாகம் தான் அதிகமாக இருக்கும்.நாம் திட உணவை விட நீர்ச்சத்து உள்ள உணவை தான் இந்த வெயில் காலத்தில் அதிகம் எடுத்துக் கொள்வோம்.தண்ணீர் அதிகமாக குடிக்கும் இந்த வெயில் இக்காலத்தில் அதனை களிமண் பானையில் ஊற்றி வைத்து குடித்தால் உடலுக்கு ஆரோக்கியமும் அதிகரிக்கும்,தொண்டைக்கும் இதமளிக்கும். அதனைப் பற்றி இப்போது பார்க்கலாம் கோடைகாலத்தில் ஏன் தண்ணீரை மன்பானையில் ஊற்றி வைத்துக் குடிக்க வேண்டும் எதற்காக என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

கடும் கோடை

இப்பொது கடும் கோடை காலம் ஆரம்பித்து விட்டது. நாம் அனைவரும் இப்போது சாப்பாட்டை விட அதிகம் தேடுவது தண்ணீரைத் தான். தண்ணீரை சாதாரணமாக குடித்தால் தாகம் அடங்கியது போல் இருக்காது ஆகையால் சிலர் ஃப்ரிட்ஜில் வைத்து குடிப்பார்கள். பெரும்பாலான மக்கள் களிமன் பானையை பயன்படுத்துவார்கள்.

பிளாஸ்டிக் அல்லது ஸ்டீல் பாத்திரத்தை பயன்படுத்தி தண்ணீர் குடிப்பதை விட களிமண் பானையை உபயோகித்தால் உடல் நலத்திற்கு ஆரோக்கியம் உண்டாகும்.பல மருத்துவ நன்மைகள் இதில் இருப்பதால் பெரும்பாலான வீடுகளில் களிமண் பானையை பயன்படுத்துவதற்கான முக்கிய காரணம் ஆகும். கோடைகாலத்தில் களிமண் பானையில் தண்ணணீர் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி பார்க்கலாம்.

இயற்கையான குளிர்ச்சியை தரும் (Cooling effect in Nature)

ஃப்ரிட்ஜ் இல்லாத அந்த நாட்களில் களிமண் பானையில் தான் நீரை ஊற்றி வைத்து அனைவரும் பயன்படுத்தினர். குளிர்ந்த நீரை வழங்க இது மிகவும் உதவியாய் இருந்தது. இந்த பானைகள் ஆவியாதல் கொள்கையில் அதாவது( Principle of Vapourization) என்னும் அடிப்படையில் செயல்படுகின்றன. எனவே இது தண்ணீரை குளிர்விக்க மிகவும் உதவுகிறது.இது படிப்படியாக தண்ணீரை குளிர்விக்கும் ஆற்றல் பெற்றது.வேறு எந்த பாத்திரத்திலும் இந்த தன்மை கிடையாது.

தொண்டைக்கு இதம் அளிக்கிறது (Good for Throat)

கோடைகாலத்தில் தனியாக வெளியே பாத்திரத்தில் ஊற்றி வைத்த நீர் சூடாகவும்,ஃப்ரிட்ஜில் உள்ள நீர் குளிராகவும் இருக்கும்.அனைவராலும் ஃப்ரிட்ஜ் தண்ணீரை அருந்த இயலாது சளி அல்லது இருமல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.ஆனால் களிமண் பானையில் உள்ள நீர் சரியான குளிர்ச்சியில் குடிநீரை வழங்குகிறது.இது தொண்டைக்கு இதமாகவும், மென்மையாகவும் இருக்கும்.இதனால் சளி இருமல் உள்ளவர்கள் கூட இதனை பயப்படாமல் அருந்தலாம்.

சூரிய கதிர்களால் ஏற்படும் பக்கவாதத்தை தடுக்கிறது (Prevent from sun stroke)

சன்ஸ்ட்ரோக் என்பது மிகவும் பொதுவான பிரச்சினையாகும், இது கோடைகாலத்தில் நிறைய நபர்களை தாக்கும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. களிமண் பானையில் சேமிக்கப்படும் நீரிலிருந்து வரும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலில் குளுக்கோஸ் அளவைப் பராமரிக்க உதவுகிறது மேலும் உங்கள் உடலுக்கு மென்மையான குளிரூட்டும் விளைவையும் வழங்குகிறது.

​இயற்கையாக ஆல்கலைன் கொண்டுள்ளது (Alkaline in Nature)

மனித உடல் இயற்கையாகவே அமிலத் தன்மை கொண்டது.களிமணில் ஆல்கலைன் எனும் மூலப்பொருள் இருக்கிறது.நீங்கள் களிமண் பானையில் உள்ள தண்ணீரை உட்கொள்ளும் போது அதில் உள்ள ஆல்கலைன் நம் உடலில் உள்ள அமிலத்துடன் சேரும் போது சரியான அளவு pH சமநிலையை உருவாக்க உதவுகிறது. களிமண் பானை குடிப்பதால் அஸிடிட்டி மற்றும் வயிற்று பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.

​மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்கிறது (Boosts Metabolism)

பிளாஸ்டிக் பாட்டில்களில் சேமித்து வைக்கப்பட்ட தண்ணீரை நாம் குடிக்கும்போது, அதில் பிஸ்பெனால் ஏ அல்லது பிபிஏ போன்ற நச்சு இரசாயனங்கள் உள்ளன, இது உடலுக்கு பல வழிகளில் தீங்கு விளைவிக்கும். இது டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) அளவைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது, மேலும் இது எண்டோகிரைனை(Endocrine) சீர்குலைக்கும் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம், ஒரு களிமண் பானையில் தண்ணீர் குடிப்பதால் டெஸ்டோஸ்டிரோன் அளவை சமன் செய்ய உதவுகிறது மற்றும் உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) மேம்படுத்துகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு