பிள்ளையானுக்கு எதிரான வழக்கு ஜூலை 27இற்கு ஒத்திவைப்பு!

ஆசிரியர் - Admin
பிள்ளையானுக்கு எதிரான வழக்கு ஜூலை 27இற்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) எதிரான வழக்கு எதிர்வரும் ஜுலை மாதம் 27 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு இன்று மட்டக்களப்பு குடியியல் மேல் முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோது இந்த வழக்கு எதிர்வரும் ஜுலை 27 ம் மற்றும் 28 ம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உத்தரவிட்டு வழக்கை நீதிபதி டி.சூசைதாசன் ஒத்திவைத்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு