டெஸ்ட போட்டி போன்றது கொரோனா!! -அபாயகரமானது என்கிறார் கங்குலி-

ஆசிரியர் - Editor III
டெஸ்ட போட்டி போன்றது கொரோனா!! -அபாயகரமானது என்கிறார் கங்குலி-

டெஸ்ட் போட்டி விளையாடுவது போன்று கரடு முரடான அபாயகரமானதே இந்த கொரோனா வைரஸ் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கங்குலி தெரிவித்தார். 

தற்போதுள்ள சூழ்நிலை அபாயகரமான ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டி விளையாடுவது போன்று உள்ளது. சீமிங் மற்றும் ஸ்பின்னிங் ஆகியவற்றிற்கு பந்து நன்றாக துணைபோகும். பேட்ஸ்மேன் சற்று தவறு செய்தாலும் அவ்வளவுதான்.

பேட்ஸ்மேன் ரன்கள் அடிக்க வேண்டும். அதேவேளையில் சிறிய தவறு கூட செய்யாமல் கவனமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் டெஸ்ட் போட்டியை ஜெயிக்க முடியும். தற்போதுள்ள சூழ்நிலை மிகவும் கடினமாக உள்ளது. ஆனால், ஒருங்கிணைந்து இதில் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு