நாட்டிலேயே மிகப்பெரிய நிதி மோசடி - பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்தது என்ன?

ஆசிரியர் - Editor II
நாட்டிலேயே மிகப்பெரிய நிதி மோசடி - பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்தது என்ன?

நாட்டிலேயே மிகப்பெரிய நிதி மோசடியாக கருதப்படும் பஞ்சாப் தேசிய வங்கி முறைகேடு குறித்த தகவல்கள் என்ன? எவ்வளவு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது? இதன் பாதிப்புகள் என்னென்ன?

சுமார் 11 ஆயிரத்து 360 கோடி ரூபாய் அளவுக்கு தங்கள் வங்கியில் நிதி மோசடி மற்றும் அங்கீகரிக்கப்படாத நிதி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளதாக நேற்றைய தினம் (புதன்கிழமை) அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது பஞ்சாப் தேசிய வங்கி.

மும்பை பிராடி ஹவுஸில் உள்ள பஞ்சாப் தேசிய வங்கி சட்ட விரோதமாக ஹாங்காங்கில் உள்ள இரு இந்திய வங்கிகளான ஆக்சிஸ் மற்றும் அலகாபாத் வங்கிகள் மூலம் குறிப்பிட்ட சில நபர்கள் நடத்தி வந்த நிறுவனங்களுக்கு அதிகளவில் கடன் வழங்க அதிகாரம் கொடுத்துள்ளது.

நிறுவனங்களின் பங்குதாரர்களான நிரவ் மோதி, நிஷால் மோதி, அமி நிராவ் மோதி மற்றும் மெகுல் சோக்ஸி ஆகியோர் மீது வழக்கு பதிய வேண்டும் என்றும், மோசடிக்கு உதவியதாக வங்கி ஊழியர்கள் கோகுல்நாத் ஷெட்டி மற்றும் மனோஜ் ஹணுமந்த் காரத் ஆகியோர் மீதும் வழக்கு பதிய வேண்டும் என்றும் சிபிஐயிடம் பஞ்சாப் தேசிய வங்கி கேட்டு கொண்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு