2500 ரூபாய் காசுக்கு ஆசைப்பட்டு யாழ்.மாவட்டத்திற்கு பேராபத்தை உண்டாக்க நினைத்த லொறி சாரதி..!

ஆசிரியர் - Editor I
2500 ரூபாய் காசுக்கு ஆசைப்பட்டு யாழ்.மாவட்டத்திற்கு பேராபத்தை உண்டாக்க நினைத்த லொறி சாரதி..!

தலா 2500 ரூபாய் பணத்திற்காகவே கொழும்பிலிருந்து 7 பேரை யாழ்ப்பாணத்திற்கு மிளகாய் லொறியில் ஏற்றிவந்தமை அம்பலமாகியுள்ளது. 

அத்துடன் பரவூர்தியின் சாரதி ஒருவரிடம் 2500 ரூபா வீதம் பெற்று 7 பேரையும் பாரவூர்திக்குள் மறைத்தே யாழ்ப்பாணம் அழைத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இவர்களில் தொல்புரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று மாலை இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். 

மீதி 6 பேரும் யாழ்ப்பாண பொலிஸ் பொறுப்பதிகாரியின் நடவடிக்கையில் நள்ளிரவு பிடிக்கப்பட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு