பெற்ற தாயை வீதியில் அடித்து கொலை செய்துவிட்டு சடலத்திற்கு அருகில் படுத்திருந்த மகன்..! சம்பூரில் கொரூரம்..

ஆசிரியர் - Editor I
பெற்ற தாயை வீதியில் அடித்து கொலை செய்துவிட்டு சடலத்திற்கு அருகில் படுத்திருந்த மகன்..! சம்பூரில் கொரூரம்..

கணவன் மனைவிக்கிடையில் உருவான சண்டையில் விலக்கு பிடிக்க சென்ற தாயை நடு வீதியி ல் அடித்து கொலை செய்துவிட்டு தாயின் சடலத்திற்கு அருகில் படுத்திருந்த மகன் கைது செய்ய ப்பட்டிருக்கின்றான். இந்த சம்பவம் சம்பூர்- சந்தனவெட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் இ.சரோஜாதேவி (வயது57) என்ற பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, பலியான குறித்த பெண்ணும் அவரது மகன், மருமகள் ஆகியோர் சீதனவெளி பகுதியில் வசித்து வந்த நிலையில், 

மகனுக்கும் மருமகளுக்கும் இடையில் குடும்பத்தகராறு ஏற்பட்டிருந்தது.இந்நிலையில், மருமகள், சந்தனவெட்டை, 64ம் கட்டையிலுள்ள அவரது தாயாரின் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையில் மீண்டும் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து தாயார் இது தொடர்பாக விசாரிப்பதற்காக வீதியால் சென்று கொண்டிருந்த போது, அவரது மகன் எதிரில் வருகைதந்ததாகவும், தகராறு தொடர்பில் கேட்டபோது தாயாரை மகன் அங்கேயே அடித்துக் கொன்றுள்ளதாகவும் 

பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.பலியான பெண்ணின் சடலம், மூதூர் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்த சம்பூர் பொலிஸார், 

சம்பவம் தொடர்பில் மகனைக் கைது செய்துள்ளனர்.பலினை தாய்க்கு அருகில் தாக்குதல் நடத்திய மகன் உறங்கிக் கொண்டிருந்ததாக, அயலவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு