வீணைச் சின்னத்தில் ஈபிடிபி போட்டி!

ஆசிரியர் - Admin
வீணைச் சின்னத்தில் ஈபிடிபி போட்டி!

நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி., வடக்கு கிழக்கு மாகாணங்களில் வீணைச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளது.

வீணைச் சின்னத்தில் போட்டியிடும் முடிவு ஈபிடிபி கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்டால் வாக்குகளை அதிகளவில் பெற முடியாது என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் 'மவ்பிம' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஈ.பி.டி.பி. வீணைச் சின்னத்தில் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளது என்பதை, ஈ.பி.டி.பியின் பிரமுகரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சி.தவராசா உறுதிப்படுத்தியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு