8 வயதான சிறுமி மீது பாலியல் பலாத்காரம்..! சிறுமியின் மாமன் கைது..

ஆசிரியர் - Editor I
8 வயதான சிறுமி மீது பாலியல் பலாத்காரம்..! சிறுமியின் மாமன் கைது..

கந்தப்பளை கோப்பி தோட்டத்தில் 8 வயதான சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் மாமாவான 27 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். 

சந்தேகநபரிடம் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதுடன், இன்று வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோட்பில் தோட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி நேற்று முன்தினம் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சிறுமியின் 27 வயதான மாமா 

கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.சிறுமி தற்போது நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ராகல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு