தமிழ் இளைஞன் மீது காதல்..! முஸ்லிம் பெண்ணை கிளிநொச்சியிலிருந்து கடத்தி சென்ற 9 போ் ஓமந்தையில் கைது. இராணுவம் அதிரடி..

ஆசிரியர் - Editor I
தமிழ் இளைஞன் மீது காதல்..! முஸ்லிம் பெண்ணை கிளிநொச்சியிலிருந்து கடத்தி சென்ற 9 போ் ஓமந்தையில் கைது. இராணுவம் அதிரடி..

கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து திருகோணமலைக்கு இளம் பெண்ணை கடத்தி சென்ற 4 பெ ண்கள் உள்ளிட்ட 9 கடத்தல்காரா்களை ஓமந்தை சோதனை சாவடியில் இராணுவம் முற்றுகையிட்டு கைது செய்துள்ளதுடன், கடத்தப்பட்ட பெண்ணையும் மீட்டுள்ளனா். 

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றும் திருகோணமலையை சேர்ந்த 25 வயதுடைய பெண்ணொருவர் (முஸ்ஸிம்) தமிழ் இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விடயம் கடந்த சில மாதங்களுக்கு பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது. 

இதன் போது பெண்ணின் குடும்பத்தினருக்கிடையே சண்டைகள் இடம்பெற்றுள்ளன. காதலுக்கு பெற்றோரின் எதிர்ப்பால் குறித்த பெண் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பெண்கள் விடுதியில் தங்கிருந்து பணியாற்றி வந்துள்ளார். இன்று வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த 

சில நபர்கள் பெண்ணை வலுக்கட்டாயமாக வானில் ஏற்றி திருகோணமலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பெண்ணை வலுக்கட்டாயமாக இழுப்பதினை அவதானித்த வைத்தியசாலை நிர்வாகத்தினர் கிளிநொச்சி இராணுவ தலைமையகத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தினர் வவுனியா இராணுவ தலைமையத்திற்கு தகவலை வழங்கி ஒமந்தை இராணுவ சாவடியில் குறித்த வானை மடக்கி பிடித்தனர். இதன் போது வாகனத்தில் இருந்த சாரதி உட்பட ஒன்பது நபர்களை இராணுவத்தினர் பிடித்து அவர்கள் பயணித்த வாகனத்துடன் 

ஒமந்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்றவர்கள் பெண் உறவினர்கள் என தெரியவருவதாக ஒமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு