மேற்கிந்திய தீவு - இலங்கை மோதல் இன்று!! -நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி-

ஆசிரியர் - Editor III
மேற்கிந்திய தீவு - இலங்கை மோதல் இன்று!! -நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி-

இலங்கை - மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதலவாது சர்வதேச ஒருநாள் கிரிக்கொட் போட்டியில் இலங்கை அணி நாணயச் சுழற்சியில் வெற்றிப்பெற்று களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

இன்றைய போட்டி கொழும்பு எஸ். எஸ். சி. மைதானத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 ஒவர்கள் நிறைவில் 1 விக்கெட்டினை இழந்து 13 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கிரான் பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியுடன் ஒருநாள் தொடரில் மோதவுள்ள 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம்  உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

திமுத் கருணாரத்ன தலைமையிலான இந்த அணியில் அவிஷ்க பெர்னாண்டோ, குசல் ஜனித் பெரேரா, செஹான் ஜயசூரிய, நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டீஸ், அஞ்சலோ மெத்தியூஸ், தனஞ்சய டிசில்வா, திஸார பெரேரா, தசூன் சானக்க, வனிந்து ஹசரங்க, லக்ஷான் சந்தகான், இசுறு உதான, நுவான் பிரதீப், மற்றும் லஹிரு குமார ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு