ஊருக்குள் படையெடுத்த நூற்றுக்கு மேற்பட்ட யானைகளின் கூட்டம்!

ஆசிரியர் - Admin
ஊருக்குள் படையெடுத்த நூற்றுக்கு மேற்பட்ட யானைகளின் கூட்டம்!

அம்பாறை - காரைதீவு மாவடிப்பள்ளியில், நூற்றுக்கணக்கான யானைகள் கூட்டமாக, ஊருக்குள் புகுந்துள்ளதை அடுத்து, அவற்றை விரட்டுவதற்காக வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திடீரென காரைதீவு மாவடிப்பள்ளி எல்லையை கடந்து ஊருக்குள் பிரவேசித்த சுமார் 100 க்கும் அதிகமான யானைகளை கட்டுப்படுத்தி அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்காக துரித நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்று மதியம் யானைகள் நகர்ந்து செல்லாமல் ஒரு இடத்தில் கூடி நிற்கின்றமை தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு பொதுமக்களால் தகவல் தெரிவிக்கப்பட்டது. குறித்த யானைகளை அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்காக வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக யானைக் கூட்டத்தின் நகர்வுகளை அவதானித்து வருகின்றனர்.

இதனால் மாவடிப்பள்ளி பாலத்தின் அருகே போக்குவரத்து செய்யும் பொதுமக்கள் அவ்விடத்தில் குவிந்து யானைக் கூட்டத்தை அவதானிப்பதை காணமுடிகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு