ஆசிய மல்யுத்த போட்டி!! -இந்திய வீரர் சுனில் குமார் தங்கம் வென்று சாதனை-

ஆசிரியர் - Editor III
ஆசிய மல்யுத்த போட்டி!! -இந்திய வீரர் சுனில் குமார் தங்கம் வென்று சாதனை-

கிரிகோ ரோமன்’ 87 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சுனில் குமார், கிர்கிஸ்தான் வீரர் அஜாத் சாலிடினோவை சந்தித்தார். 

அபாரமாக செயல்பட்ட சுனில் குமார் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். முன்னதாக சுனில்குமார் அரைஇறுதியில் அஜாமத் குஸ்துபயேவுக்கு எதிராக (கஜகஸ்தான்) 1-8 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த நிலையில் மீண்டெழுந்து 12-8 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார்.

ஆசிய மல்யுத்த போட்டியில் கிரிகோ ரோமன் பிரிவில் இந்திய வீரர் ஒருவர் தங்கப்பதக்கம் வெல்வது கடந்த 27 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு