பகலிலும் வீட்டைவிட்டு வெளியேபோக முடியவில்லை..! பருத்துறை தும்பளை மக்கள் குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I
பகலிலும் வீட்டைவிட்டு வெளியேபோக முடியவில்லை..! பருத்துறை தும்பளை மக்கள் குற்றச்சாட்டு..

யாழ்.பருத்துறை- தும்பளை பகுதியில் வீட்டு கதவை உடைத்து உட்புகுந்த கொள்ளையா்கள் சுமாா் 17 பவுண் நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்த நிலையில், தொடா்ந்தும் கொள்ளையா்கள் சுதந்திரமாக நடமாடுவதாக மக்கள் கூறுகின்றனா். 

கடந்த 31 ஆம் திகதி இந்தப் பகுதியில் பட்டப்பகலில் ஆசிரியர் திருமதி கேதீஸ்வரன் பவித்திராவின் பூட்டி இருந்த வீட்டுக் கதவை உடைத்து 17 பவுண் நகை திருட்டுப் போனதை அடுத்து மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் பகலிலும் வீட்டை விட்டு வெளியேபோக 

முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.திருட்டு தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு