யாழ்.மாநகருக்குள் நடக்கும் அசிங்கம்..! மனித கழிவுகள், விலங்கு கழிவுகளை மக்கள் வீடுகளில் கொட்டுவதால் பதற்றம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகருக்குள் நடக்கும் அசிங்கம்..! மனித கழிவுகள், விலங்கு கழிவுகளை மக்கள் வீடுகளில் கொட்டுவதால் பதற்றம்..

யாழ்.நகருக்கு அண்மையில் உள்ள காக்கைதீவு- வசந்தபுரம் பகுதியில் மனித கழிவுகள் மற்றும் மிருக கழிவுகள் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் கொட்டப்படுவது தொடா்பாக அப்பகுதி மக்க ள் இன்று காலை வீதியில் இறங்கி போராட்டம் நடாத்தியிருக்கின்றனா். 

யாழ்ப்பாணம் மாநகரசபையின் கழிவகற்றும் உழவு இயந்திரங்கள் அனைத்தும் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது எனினும் குறித்த இடத்திற்குச் சென்றுள்ளனர். இந்நிலையில், யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்கள் 

மற்றும் யாழ்ப்பாண மாநகர சபையின் பொறியியலாளர்கள் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வீசப்பட்ட கழிவுகளை உடனடியாக அகற்றுவதாகவும் அவ்விடத்தில் சட்டவிரோதமாகக் குப்பை வீசுபவர்களைக் கைது செய்வதற்காக 

உடனடியாக கண்காணிப்பு கெமரா பொருத்துவதாக உறுதியளித்தனர். இந்நிலையில், குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அவ்விடத்தை விட்டுக் கலைந்து சென்றதோடு குறித்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் செல்ல அனுமதித்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு