யாழ்.காங்கேசன்துறையில் 4 இடங்களில் கடற்படை அதிரடி சோதனை..! 157 கிலோ கஞ்சா மீட்பு, கடந்த 35 நாட்களில் 988 கிலோ மீட்பாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.காங்கேசன்துறையில் 4 இடங்களில் கடற்படை அதிரடி சோதனை..! 157 கிலோ கஞ்சா மீட்பு, கடந்த 35 நாட்களில் 988 கிலோ மீட்பாம்..

யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை கடற்பகுதியில் கடற்படையினா் அடுத்தடுத்து 4 இடங்களில் கடற்படையினா் நடாத்திய திடீா் சோதனை நடவடிக்கையின்போது சுமாா் 157 கிலோ கேரள க ஞ்சா மீட்கப்பட்டிருக்கின்றது. 

நேற்று பகல் கரைப்பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 43 கிலோ 400 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.குறித்த பகுதியை அண்மித்த 3 இடங்களில் மேற்கொண்ட சோதனையின்போது 113 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா 

கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்பிரகாரம், நேற்றைய தினத்தில் கடற்படையினரால முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் 157 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டடுள்ளது. 

கடந்த 35 நாட்களுக்குள் 988 கிலோகிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இதில் 700 கிலோகிராம் கேரள கஞ்சா வட கடற்பிராந்தியத்திலேயே கைப்பற்றப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு