நியூசிலாந்து தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகல்

நியூசிலாந்து தொடரில் இருந்து இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோகித் சர்மா காயம் காரணமாக விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் 4-வது 20 போட்டியில் விளையாட வில்லை. அவர் காயம் காரணமாக விளையாடவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
எனினும், 5-வது டிபோட்டியில் அவர் களமிறங்கி 60 ரன்களை குவித்தார். இந்த நிலையில், காலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக ரோகித் சர்மா எஞ்சியுள்ள ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால், அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.