விளையாடி கொண்டிருந்த சிறுமி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு..! அச்சுவேலியில் சம்பவம்..
யாழ்.அச்சுவேலி வல்லை பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் தவறி விழுந்த 5 வயதான சிறுமி உயிரிழந் துள்ளார்.
முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார் . வீட்டில் இருந்தவர்கள் சிறுமியை தேடி பார்த்தபோது,
பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து சடலமாக காணப்பட்டுள்ளார்.