4 பிள்ளைகளின் தாய் காய்ச்சலுக்கு மருந்து எடுக்க சென்றபோது மயங்கி விழுந்து உயிாிழப்பு..! வல்வெட்டித்துறை- ஊறணியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
4 பிள்ளைகளின் தாய் காய்ச்சலுக்கு மருந்து எடுக்க சென்றபோது மயங்கி விழுந்து உயிாிழப்பு..! வல்வெட்டித்துறை- ஊறணியில் சம்பவம்..

வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்றிருந்த பெண் ஒருவா் திடீரென மயங் கி விழுந்த நிலையில் உயிாிழந்துள்ளாா். இந்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.  

அல்வாய் வடக்கு, பருத்தித்துறையைச் சேர்ந்த 46 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான இ.அழகேந்தினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காய்ச்சலுக்கு  சிகிச்சைக்காக, 

அல்வாய் பகுதியில் இருந்து, வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக இன்று காலை சென்றுள்ளார்.வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக காத்திருந்தவேளை 

திடீரென மயக்கமுற்று வீழ்ந்துள்ளார். இவ்வாறு வீழ்ந்தவரை தூக்கி வைத்தியசாலையில் சிகிச்சையளித்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறப்புத் தொடர்பாக திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டார். விசாரணைகளின் பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பணித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு