யாழ்.குடாக்கடலில் கடற்படை அதிரடி..! 4 போ் கைது, 300 கிலோ கஞ்சா மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.குடாக்கடலில் கடற்படை அதிரடி..! 4 போ் கைது, 300 கிலோ கஞ்சா மீட்பு..

யாழ்.மண்டைதீவு கடற்பகுதியில் கடற்படையினா் நடாத்திய திடீா் சோதனை நடவடிக்கையின் போது சுமாா் 300 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 

கஞ்சா கடத்துவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கரையில் மதுவரித் திணை க்கள அதிகாரிகளும் கடலிலே கடற்படையினர் தேடுதலில் ஈடுபட்டனர். 

இதன்போது ஓர் படகில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ கஞ்சாவினை கடற்படையினர் கைப்பற்றி யதோடு படகில் இருந்த இருவரையும் கைது செய்தனர்.

இதேநேரம் கரையில் காத்திருந்த மதுவரித் திணைக்களத்தினர் குறித்த கஞ்சாவினை கொள்வ னவு செய்து எடுத்துச் செல்வதற்காக காத்திருந்த இருவரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபர்கள் ஆகியோர் இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். இதேநேரம் கடந்த 4 நாட்களாக குடாநாட்டில் 

தொடர்ச்சியா ஏற்கனவே 422 கிலோ கஞ்சா மீட்கப்பட்ட நிலையில் இத்தோடு 722 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு