யாழ்.குடாநாட்டுக்குள் கொரோனா தொற்றுடன் வந்த நோயாளி எங்கே..? தீவிர தேடுதலில் பொலிஸார், இராணுவம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.குடாநாட்டுக்குள் கொரோனா தொற்றுடன் வந்த நோயாளி எங்கே..? தீவிர தேடுதலில் பொலிஸார், இராணுவம்..

யாழ்.குடாநாட்டுக்கு கட்டார் நாட்டிலிருந்து கொரோ னா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் யாழ்.போ தனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலை யில் தப்பி ஓடியுள்ளார்.

அதிக இருமல் காச்சலுடன் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல அறிகுறிகளுடன் நேற்றுக் காலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் கட்டாரில் அதிக சீன நாட்டவர்களுடன் இணைந்தே பணியாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டதோடு இது தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

எழுந்தமானமாக அல்லது ஐயத்தின் அடிப்படையில் அன்றி அதனை உரியவகையில் உறுதி செய்த பின் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றலாம் என போதனா வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்ட நிலையில் 

தெல்லிப்பழை வைத்தியசாலையில் மேலதிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மதியம் 12 மணியளவில் குறித்த நோயாளி வைத்தியசாலைநில் இருந்து தப்பிச் சென்றுள்ளதனால் உடனடியாக 

குறித்த தோயாளியின் விபரங்கள் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு