யாழ்.சுண்டுக்குளி பகுதில் பொலிஸார் அதிரடி..! வீட்டுக்குள்ளிருந்து 140 கிலோ கஞ்சா மீட்பு, வீட்டின் உரிமையாளர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.சுண்டுக்குளி பகுதில் பொலிஸார் அதிரடி..! வீட்டுக்குள்ளிருந்து 140 கிலோ கஞ்சா மீட்பு, வீட்டின் உரிமையாளர் கைது..

யாழ்.சுண்டுக்குளி பழைய பூங்கா பகுதியில் உள்ள வீடொன்றை நேற்று இரவு முற்றுகையிட்ட பொலிஸ் படை வீட்டிலிருந்து 140 கிலோ கேரள கஞ்சாவை மீட் டுள்ள பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் சிறப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன்போது அங்கு பதிக்கிவைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் நிறை 142 கிலோ 945 கிராம் என எடையிடப்பட்டுள்ளது. சுமார் ஒரு கோடியே 50 லட்சம் பெறுமதி என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதனை வீட்டில் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் 33 வயதுடைய குடும்பத்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கொழும்பில் வசித்துவிட்டு திருமணத்தின் பின் குறித்த விலாசத்தில் வசித்து வருகிறார்.

சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கஞ்சா போதைப்பொருளும் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு